Tuesday, August 21, 2007

நன்றி மறப்பது நன்றன்று - கதை

ராஜாவும் ராமும் ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரு தடவை அவங்க ஒரு பாலைவணத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை வந்து ராஜா, ராம் கண்ணத்துல அடிச்சுட்டார்.

உடனே ராம் கீழ மணல்ல இப்படி எழுதினார்.'' என்னோட உயிர் நண்பன் இன்னைக்கு என்னை கண்ணத்தில் அறைஞ்சுட்டார்'' னு.

இன்னும் கொஞ்சம் நடந்து போயிட்டே இருந்தப்போ ஒரு Oasis வந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இறங்குனாங்க. அப்ப தண்ணிக்குள்ள ராம் மாட்டினதுனால, ராஜா, ராம காப்பாத்தினார். ராஜா காப்பாத்தினதுனால உடனே ராம் அங்க இருந்த ஒரு பாறையில இப்படி எழுதினார் '' என்னோட உயிர் நண்பன் என்னோட உயிர இன்னைக்கு காப்பாதிட்டான்'' னு.


அதுக்கு ராஜா கேட்டார், '' என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் பாறையில எழுதற..'' ன்னு..

அதுக்கு ராம் சொன்னான் '' நமக்கு ஒருத்தர் பண்ண கெடுதல மணல்ல எழுதற மாதிரி மனசுல எழுதினா.. அது மன்னிப்புங்க்குற காத்து அடிச்சு எழுதினது அழிஞ்சு போகும்.. ஆனா ஒருத்தர் செய்த உதவியை நாம பாறையில எழுதற மாதிரி மனசுல வச்சுக்கனும். காலத்துக்கும் மறக்க கூடாது'' னு சொன்னார்.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

11 comments:

ILA (a) இளா said...

வழக்கம் போல சுருக்கமா நல்லா முடிச்சாச்சு போல இருக்கே. அருமை.
தமிழ்ச்சங்கத்துல சேர்த்துடவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் தண்ணீர்ல எழுதற..'' ன்னு..//
நல்லக்கதை ஆனா பாறையில்ன்னு வரதுக்கு பதிலா தண்ணீர்ன்னு டைப்படிச்சிட்டயோம்மா

சிவபாலன் said...

அவந்திகா,

அட.. சிறுகதையா..கலக்குங்க..

நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்!

Avanthika said...

இளா அண்ணா..தேங்கஸ்..:-))

லட்சுமி அக்கா...மாத்திட்டேன்,,:-))
தேங்கஸ் அக்கா...

Avanthika said...

தேங்கஸ் சிவபாலன் அண்ணா

அபி அப்பா said...

அவந்தி! ராம்ன்னா நம்ம ராயல் ராமா? மத்தபடி பதிவ பத்தி சொல்லனும்னா\\ அருமையான எழுத்து நடை, ஹீரோயின் டயலாக் சூப்பர், எதிர்பாராத சூப்பர் முடிவு//:-))

ஜூலியின் புது போட்டோ சூப்பர்!

Avanthika said...

அபி அப்பா...

ஹீரோயின்??...சூப்பர் முடிவா??

என்ன அண்ணா?...:-))

இருந்தாலும்.too much..:-)

காட்டாறு said...

சூப்பர் கதை. எல்லோரும் பின்பற்ற வேண்டிய கதை. நல்லாயிருக்கு அவந்தி.

பங்காளி... said...

நடுமண்டையில நச்சுன்னு அடிச்சமாதிரி ஒரு க(தை)ருத்து....

Avanthika said...

தேங்க்ஸ் காட்டாறு அக்கா..

தேங்கஸ் பங்காளி அண்ணா

வல்லிசிம்ஹன் said...

Nalla kathai avanthika. azhaka siRappaa irunthathu. innumwiRaiya ezhutha vaazththukkaL.