Thursday, December 4, 2008

மும்பை டெரர்:அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...ப்ளீஸ்ஸ்ஸ்

இத்தன நாள் எது எதுக்கோ டேக் போட்டுட்டு இருந்தோம்.....இப்ப ஒரு நல்ல காரியத்துக்கு டேக் போட உங்களை அழைக்கிறேன்.... தயவு செய்து எல்லோரும் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

மும்பையில் நடந்த கொடூரம்....முதல் முறையாக மக்கள் அனைவருக்கும் ஒரே கருத்து.....regarding the incompetency and selfishness of our politicians.....

எங்க கிளாஸ்ல தினமும் ஒருவர் இதை பத்தி பேசனும்னு முடிவு பண்ணி பேசீட்டு இருக்கோம்..அதை தொடர்ந்து டிஸ்கஷன்ஸ்.

அதை ஏன் இங்க செய்யக் கூடாதுன்னு தோனுச்சு....எப்பவும் மாதிரி ஒரு மாசம் பேசீட்டு இதை விடக்கூடாது...இந்த கொடூரம் தந்த பாதிப்பு நம்ம மனசுல இருந்துட்டே இருக்கனும்....அப்ப தான் மாற்றம் வேண்டும் என்கிற வெறி இருக்கும்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கடமை இருக்கு.....education, health, defence, business and house wives, students, etc, etc... அனவருக்கும் ஒரு பங்கு இருக்கு...we should look beyond our immediate preferences, prorities and interests...each one should realise his / her responisbility as a citizen.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய உங்கள் எண்ணங்கள், நம்ம பஃப்வூன்ஸ் (அரசியல் வாதிகள்) பற்றிய கருத்துக்கள்... and some good leaders who can take us and lead us ...

நான் 4 பேரை டேக் பண்றேன்.... அவங்க ஒருத்தரை பண்ணா கூட போதும், அவங்க இஷ்டம்....

இந்த அருமையான மீடியாவை ஒரு நல்ல காரியத்துக்கு உபயோகிக்கலாமே.

{பி.கு - அவசரத்துல அடிச்சது....அதான் இங்கலீஷ் ம் சேர்ந்துருச்சு... சாரி.... கண்டுக்காதீங்க....:-)}
நான் கூப்பிடறது..


கண்டிப்பா எழுதுங்க..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Wednesday, November 26, 2008

நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்

{வடிவேலு ஸ்டைல்..:-)))}

என் கஸின்ஸ், பிரெண்ட்ஸ் ஏன் தில்லியில ஸ்கூல் டீச்சர்ஸ் கூட என்னை கிண்டல் பண்ணுவாங்க. என்ன பொண்ணு நீ...இப்படி இருக்கேன்னு அனுபவிக்க தெரியலைன்னு திட்டுவாங்க...ஆனா நான் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு என் ஜூலியும் கிரிக்கெட்டும் இருந்தா போதும்.

சரி விஷயம் என்னன்னா....நான் தனியா ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயும் போனது இல்லை... சினிமா சுத்தம்.....ஆனா இன்னைக்கு போனேன்.... இது என்ன பெரிய மேட்டர்னு கேக்கறீங்களா.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போனேன். அதுவும் சினிமாவுக்கு.

இது வரைக்கும் நான் பார்த்த மொத்த படமே 7..... நிஜமாவே சொல்றேன்... அதுல 4 படம் குழந்தைகள் படம்.. அதுக்கே நான் அழுத அழுகையில கூட வந்தவங்க சினிமா பார்க்குறதே ஸ்டாப் பண்ணிட்டாங்க... அப்புறம் ஸ்கூல்ல இருந்து கூப்டுட்டு போனாங்க.....வேற வழியில்லாம உட்கார வேண்டி இருந்துச்சு... அழுதா மிஸ் அடிப்பாங்களே.... அப்புறம் பத்தாவது படிக்கும் போது கஸின் எல்லாரும் சேர்ந்து சும்மா வெளியே போகலாம்னு பொய் சொல்லி கூப்டுட்டு போய் ஒரு படம்.....அழுதா அவ்வளோ தான்... இங்கேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டி மில்க் சாக்லேட் வாங்கி குடுத்து உட்காரவச்சாங்க... அது என்ன படம்னு கூட மறந்து போச்சு.

அதுக்கு அப்புறம் இன்னைக்கு என் கூட படிச்ச ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இழுத்துட்டு போனாங்க.... முக்கியமான விஷயம் நிஜமா இன்னைக்கு அழுகலை.....

அதுனால நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்.....

Note-(லட்சுமி அக்கா... என்னோட போன போஸ்ட்ல உங்க கமெண்ட் பார்த்து தான் இந்த போஸ்ட் போட ஐடியா வந்துச்சு...தேங்கஸ் அக்கா...:-))

Tuesday, November 25, 2008

கண்ணாடி- ஸென் கதை 10

ஒருத்தர் எப்பவும் எங்க போனாலும் கையில ஒரு கண்ணாடி வச்சுட்டு இருப்பாராம். இதப் பார்த்துட்டிருந்த மற்றவர் " இந்த ஆளு, தன் அழகை பற்றி ப்ரீயாக்குபைடா இருப்பார் போல இருக்கு. அதான் எப்பவும் கையில கண்ணாடி வச்சுட்டு அடிக்கடி தன் முகத்தை பார்த்துக்கறார்" னு சொன்னாராம்.

சரி அவரையே கேட்கலாம்னு ' நீங்க ஏன் எப்பவும் கண்ணாடிய கையில வச்சுட்டு இருக்கீங்க' ன்னு கேட்டாராம்.

அதுக்கு முதலாமவர் " எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் இந்த கண்ணாடிய பார்த்துப்பேன், இதுல விடை தெரியும்' னு சொன்னாராம்.

'எப்படி' னு அந்த நபர் கேட்க

முதலாமவர் "இப்ப இதுல என்ன தெரியுது?"

நபர் ' உங்க முகம்'


முதலாமவர் " அதான் விடை, எனக்கு ஏற்படும் எந்த பிரச்சனைக்கும் நான் தான் காரணம், அதை தீர்ப்பதற்கான வழியும் என் கிட்ட தான் இருக்குன்னு நினைவு படுத்திக்கத்தான் இந்த கண்ணாடி' னு சொன்னாராம்.

Friday, November 21, 2008

அம்மா அம்மா தான்..........





என்னா ஒரு லுக்கு பாருங்க.....
இருந்தாலும் என் ஜூலி இது எல்லாம் பண்ணாது.....
பூனை கழுத்த மட்டும் தான் பிடிக்கும்.....:-))

Friday, October 17, 2008

கனவு - சென் கதை


ரொம்ப புகழ் பெற்ற சென் மாஸ்டர் சுவாங் ட்சு ஒரு முறை ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவுல அவர் ஒரு பட்டாம் பூச்சியா அங்கேயும் இங்கேயும் பறந்துட்டு இருந்தாராம். பாட்டாம் பூச்சியாவே மாறி ரொம்ப சந்தோஷமா பறந்துட்டு இருந்தாராம். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ படுக்கையில மீண்டும் தான் மனுஷனா இருக்குறது உணர்ந்தாராம்.

அதுக்கு அப்புறம் " நான் மனிதனா இருந்து பட்டாம் பூச்சியா கனவு கண்டனா, இல்லை பட்டாம்பூச்சி மனுஷனா கனவு கண்டுட்டு இருக்கனா' னு மனசுக்குள்ள நினச்சாராம்.

இதை படிச்சுட்டு என் கஸின் கிட்ட சொன்னா, அவன் கேட்குறான் "அவர் மனசுக்குள்ள நினச்சது உனக்கு எப்படி தெரியும்" னு...:-)))

அது மாதிரி நீங்களும் கேட்காதீங்க...மெயில்ல வந்தது...

Thursday, September 25, 2008

ஜன்னல் - கதை

லதாவும் அவங்க அப்பாவும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனாங்களாம். முதல் நாள் ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்கும் ஒரு அம்மா துணி துவச்சி காயப் போட்டுட்டு இருந்தாங்க. அதை பார்த்துட்டு லதா, " அந்த அம்மா பாரு, துணிய நல்லா துவைக்காம அழுக்காவே காயப் போடுது" னு சொல்லி இருக்காங்க. அப்பா பேசாம இருந்தார்.

அடுத்த நாளும் பக்கத்து வீட்டு அம்மா துணி காயப் போடும் போது, ஜன்னல் வழியில பார்த்துட்டு " என்ன இந்த அம்மா நல்லாவே துணி துவைக்கறதில்லை, சோப்பை மாத்த சொல்லனும்' னு சொன்னாங்களாம். இதை கேட்டுட்டு இருந்த அப்பா பேசாம இருந்தார்.

அடுத்த நாள் பார்க்கும் போது பக்கத்து வீட்டு அம்மா துணி எல்லாம் பளிச்சுன்னு இருந்துச்சாம். லதா " அட பரவாயில்லையே, அந்த அம்மா துணி துவைக்க கத்துட்டாங்க போல இருக்கு' னு சொன்னாங்களாம்.




இதை கேட்ட அப்பா '' அதெல்லாம் ஒன்னும் இல்லை, இன்னைக்கு நான் நம்ம ஜன்னலை நல்லா கழுவி விட்டேன்... அதான் எல்லாம் தெளிவா தெரியுது' னு.



"அது மாதிரி நம்ம மனசு சுத்தத்தை பொறுத்து தான், நாம் மத்தவங்களை பார்க்கும் பார்வையும் இருக்கும். மத்தவங்களை ஜட்ஜ் பண்றதுக்கு முன்னாடி நம்ம மனசு எந்த நிலையில இருக்குன்னு உணர்ந்துட்டு சொல்லனும்" அப்படின்னு அப்பா சொன்னாராம்.

இது என் பாட்டி எனக்கு இன்னைக்கு சொன்ன கதை.

Wednesday, September 24, 2008

Intersting Magic Numbers...

MAGIC NUMBER GAME



THINK A NUMBER FROM 3 TO 9



MULTIPLY THAT NUMBER BY 3



ADD 5 TO THE ANSWER


SUBTRACT THAT NUMBER BY 12



THEN CLOSE THE EYES


இருட்டா இருக்குமே.....!!!!!

:-))))))).

யாராவது அடிக்க வர்ரதுக்குள்ள நான் ஓடீறேன்...

Friday, September 19, 2008

இது எப்படி இருக்கு....:-)

When you rearrange these letters:

PRINCESS DIANA -END IS A CAR SPIN

DORMITORY: DIRTY ROOM


ASTRONOMER: MOON STARER

DESPERATION: A ROPE ENDS IT

THE EYES: THEY SEE

GEORGE BUSH: HE BUGS GORE

SLOT MACHINES: CASH LOST IN ME

ANIMOSITY:IS NO AMITY

ELECTION RESULTS: LET'S RECOUNT

SNOOZE ALARMS: ALAS! NO MORE Z 'S

A DECIMAL POINT:IM A DOT IN PLACE

THE EARTHQUAKES: THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO: TWELVE PLUS ONE

இப்ப கடைசியா

MOTHER-IN-LAW:
WOMAN - HITLER

Thursday, April 17, 2008

God is in joking mood ....


Anna...Akkaa

Ellaarum Eppidi Irukkeenga..... :-)))))

A man was praying to god.

He said, "God?"God responded, "Yes?"

And the Guy said, "Can I ask a question?"

"Go right ahead", God said.

"God, what is a million years to you?"

God said, "A million years to me is only a second."

The man wondered.

Then he asked, "God, what is a million dollars worth to you?"

God said, "A million dollars to me is a penny."

So the man said, "God can I have a penny?"............And

God cheerfully said,"Sure!....... just a second."