Wednesday, November 26, 2008

நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்

{வடிவேலு ஸ்டைல்..:-)))}

என் கஸின்ஸ், பிரெண்ட்ஸ் ஏன் தில்லியில ஸ்கூல் டீச்சர்ஸ் கூட என்னை கிண்டல் பண்ணுவாங்க. என்ன பொண்ணு நீ...இப்படி இருக்கேன்னு அனுபவிக்க தெரியலைன்னு திட்டுவாங்க...ஆனா நான் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு என் ஜூலியும் கிரிக்கெட்டும் இருந்தா போதும்.

சரி விஷயம் என்னன்னா....நான் தனியா ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயும் போனது இல்லை... சினிமா சுத்தம்.....ஆனா இன்னைக்கு போனேன்.... இது என்ன பெரிய மேட்டர்னு கேக்கறீங்களா.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போனேன். அதுவும் சினிமாவுக்கு.

இது வரைக்கும் நான் பார்த்த மொத்த படமே 7..... நிஜமாவே சொல்றேன்... அதுல 4 படம் குழந்தைகள் படம்.. அதுக்கே நான் அழுத அழுகையில கூட வந்தவங்க சினிமா பார்க்குறதே ஸ்டாப் பண்ணிட்டாங்க... அப்புறம் ஸ்கூல்ல இருந்து கூப்டுட்டு போனாங்க.....வேற வழியில்லாம உட்கார வேண்டி இருந்துச்சு... அழுதா மிஸ் அடிப்பாங்களே.... அப்புறம் பத்தாவது படிக்கும் போது கஸின் எல்லாரும் சேர்ந்து சும்மா வெளியே போகலாம்னு பொய் சொல்லி கூப்டுட்டு போய் ஒரு படம்.....அழுதா அவ்வளோ தான்... இங்கேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டி மில்க் சாக்லேட் வாங்கி குடுத்து உட்காரவச்சாங்க... அது என்ன படம்னு கூட மறந்து போச்சு.

அதுக்கு அப்புறம் இன்னைக்கு என் கூட படிச்ச ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இழுத்துட்டு போனாங்க.... முக்கியமான விஷயம் நிஜமா இன்னைக்கு அழுகலை.....

அதுனால நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்.....

Note-(லட்சுமி அக்கா... என்னோட போன போஸ்ட்ல உங்க கமெண்ட் பார்த்து தான் இந்த போஸ்ட் போட ஐடியா வந்துச்சு...தேங்கஸ் அக்கா...:-))

Tuesday, November 25, 2008

கண்ணாடி- ஸென் கதை 10

ஒருத்தர் எப்பவும் எங்க போனாலும் கையில ஒரு கண்ணாடி வச்சுட்டு இருப்பாராம். இதப் பார்த்துட்டிருந்த மற்றவர் " இந்த ஆளு, தன் அழகை பற்றி ப்ரீயாக்குபைடா இருப்பார் போல இருக்கு. அதான் எப்பவும் கையில கண்ணாடி வச்சுட்டு அடிக்கடி தன் முகத்தை பார்த்துக்கறார்" னு சொன்னாராம்.

சரி அவரையே கேட்கலாம்னு ' நீங்க ஏன் எப்பவும் கண்ணாடிய கையில வச்சுட்டு இருக்கீங்க' ன்னு கேட்டாராம்.

அதுக்கு முதலாமவர் " எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் இந்த கண்ணாடிய பார்த்துப்பேன், இதுல விடை தெரியும்' னு சொன்னாராம்.

'எப்படி' னு அந்த நபர் கேட்க

முதலாமவர் "இப்ப இதுல என்ன தெரியுது?"

நபர் ' உங்க முகம்'


முதலாமவர் " அதான் விடை, எனக்கு ஏற்படும் எந்த பிரச்சனைக்கும் நான் தான் காரணம், அதை தீர்ப்பதற்கான வழியும் என் கிட்ட தான் இருக்குன்னு நினைவு படுத்திக்கத்தான் இந்த கண்ணாடி' னு சொன்னாராம்.

Friday, November 21, 2008

அம்மா அம்மா தான்..........





என்னா ஒரு லுக்கு பாருங்க.....
இருந்தாலும் என் ஜூலி இது எல்லாம் பண்ணாது.....
பூனை கழுத்த மட்டும் தான் பிடிக்கும்.....:-))