Friday, October 17, 2008

கனவு - சென் கதை


ரொம்ப புகழ் பெற்ற சென் மாஸ்டர் சுவாங் ட்சு ஒரு முறை ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவுல அவர் ஒரு பட்டாம் பூச்சியா அங்கேயும் இங்கேயும் பறந்துட்டு இருந்தாராம். பாட்டாம் பூச்சியாவே மாறி ரொம்ப சந்தோஷமா பறந்துட்டு இருந்தாராம். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ படுக்கையில மீண்டும் தான் மனுஷனா இருக்குறது உணர்ந்தாராம்.

அதுக்கு அப்புறம் " நான் மனிதனா இருந்து பட்டாம் பூச்சியா கனவு கண்டனா, இல்லை பட்டாம்பூச்சி மனுஷனா கனவு கண்டுட்டு இருக்கனா' னு மனசுக்குள்ள நினச்சாராம்.

இதை படிச்சுட்டு என் கஸின் கிட்ட சொன்னா, அவன் கேட்குறான் "அவர் மனசுக்குள்ள நினச்சது உனக்கு எப்படி தெரியும்" னு...:-)))

அது மாதிரி நீங்களும் கேட்காதீங்க...மெயில்ல வந்தது...