Thursday, October 18, 2007

நண்பனுக்கு குடுத்த செக் - கதை


ஒரு ஊர்ல ஒரு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப டியர் ப்ரெண்ட்ஸ். ஒன்னாவே வாழ்ந்தாங்க. ஒரே தொழிலும் பண்ணீட்டு இருந்தாங்க. நிறைய சொத்து சேர்ந்துட்டாங்க.

அதுல ஒரு நண்பர் இன்னொருவர் கிட்ட கேட்டார், '' நான் இறந்துட்டா நீ என்ன பண்ணுவே'' .

அதுக்கு நண்பர், '' நீயே போன பிறகு எனக்கு என்ன இருக்கு இந்த உலகத்துல... நினச்சுப் பார்க்க முடியலை'' னார்.

இதை கேட்ட உடனே அவருக்கு ரொம்ப சந்தோஷம் ஆயுடுச்சு '' அப்ப நான் இறந்த பிறகு நாம சேர்த்த சொத்தை எல்லாம் என்னை புதைக்குற குளிக்குள்ள போட்டுறு'' னார். '' ஊர்ல இருக்குற பெரியவங்க முன்னாடி நீ சத்தியம் செய்து கொடுக்கனும்'' னு சொல்லிட்டார்.

நண்பருக்கு அதிர்ச்சி ச்சே என்ன இவன் இப்படி இருக்கான்னு. ஆனா நண்பர் கிட்ட '' சரி நண்பா அப்படியே செய்யறேன்'' னார். சத்தியமும் செய்து கொடுத்தார்.

சில நாள் கழிச்சு முதல் நண்பர் ஏதோ நோய் வந்து இறந்து போயிட்டார்.

க்ளைமேக்ஸ் வந்துடுச்சா. நண்பர புதைக்குற டைம் வந்துடுச்சு. அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாம் இரண்டாம் நண்பர் என்ன செய்யப் போரார்னு பார்த்துட்டு இருந்தாங்க. நண்பர் ஒரு செக்ல கை எழுத்து போட்டு குழிக்குள்ள போட்டார்.

ஊர்க்காரங்க என்ன இதுன்னு கேட்டாங்க. அதுக்கு அவர் '' நான் எங்களோட சொத்தை எல்லாம் வித்து பேங்க்ல போட்டு இருக்கேன். அதோட செக் தான் இது. என்னோட பங்கையும் சேர்த்து போட்டுட்டேன்'' னார்.

11 comments:

ஜெகதீசன் said...

:))

அபி அப்பா said...

என்னை போல் ஒருவன் :-))

நாமக்கல் சிபி said...

:))

இரண்டாம் சொக்கன்...! said...

ஹ்ஹி..ஹி....சேம் ப்ளட்..

அபி அப்பா said...

அவந்தி! எனக்கு சொல்லைல்ல! ஓக்கே ஓக்கே வாழ்த்துக்கள்! ஒரு பதிவுன்னா போட்டிடவா!!!

ILA (a) இளா said...

அருமை...

நாகை சிவா said...

:)))) - இது பதிவுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Avanthika said...

ellaarthukkum thanks

Abi appaa naan yaarukkum sollalai.. eannaa naan eppavum birthday ellaam romba celebrate panna matean....Maathini thaan post potutta..:-))

thanks anna...unga wishes kku

thanks Ila anna

. said...

அப்ப நான் வந்தது லேட்டா? இருந்தாலும் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

நட்பு என்றால் இது தான் நட்பு

Avanthika said...

எல்லார்த்துக்கும் தேங்கஸ்