Thursday, December 4, 2008

மும்பை டெரர்:அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...ப்ளீஸ்ஸ்ஸ்

இத்தன நாள் எது எதுக்கோ டேக் போட்டுட்டு இருந்தோம்.....இப்ப ஒரு நல்ல காரியத்துக்கு டேக் போட உங்களை அழைக்கிறேன்.... தயவு செய்து எல்லோரும் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

மும்பையில் நடந்த கொடூரம்....முதல் முறையாக மக்கள் அனைவருக்கும் ஒரே கருத்து.....regarding the incompetency and selfishness of our politicians.....

எங்க கிளாஸ்ல தினமும் ஒருவர் இதை பத்தி பேசனும்னு முடிவு பண்ணி பேசீட்டு இருக்கோம்..அதை தொடர்ந்து டிஸ்கஷன்ஸ்.

அதை ஏன் இங்க செய்யக் கூடாதுன்னு தோனுச்சு....எப்பவும் மாதிரி ஒரு மாசம் பேசீட்டு இதை விடக்கூடாது...இந்த கொடூரம் தந்த பாதிப்பு நம்ம மனசுல இருந்துட்டே இருக்கனும்....அப்ப தான் மாற்றம் வேண்டும் என்கிற வெறி இருக்கும்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கடமை இருக்கு.....education, health, defence, business and house wives, students, etc, etc... அனவருக்கும் ஒரு பங்கு இருக்கு...we should look beyond our immediate preferences, prorities and interests...each one should realise his / her responisbility as a citizen.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய உங்கள் எண்ணங்கள், நம்ம பஃப்வூன்ஸ் (அரசியல் வாதிகள்) பற்றிய கருத்துக்கள்... and some good leaders who can take us and lead us ...

நான் 4 பேரை டேக் பண்றேன்.... அவங்க ஒருத்தரை பண்ணா கூட போதும், அவங்க இஷ்டம்....

இந்த அருமையான மீடியாவை ஒரு நல்ல காரியத்துக்கு உபயோகிக்கலாமே.

{பி.கு - அவசரத்துல அடிச்சது....அதான் இங்கலீஷ் ம் சேர்ந்துருச்சு... சாரி.... கண்டுக்காதீங்க....:-)}
நான் கூப்பிடறது..


கண்டிப்பா எழுதுங்க..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

22 comments:

துளசி கோபால் said...

பிரச்சனை இல்லை அவந்தி.

செஞ்சுறலாம்.

நாளைய உலகம் உங்களைப்போன்ற இளையவர்கள் கையில்.


வாழ்த்து(க்)கள்.

ஆயில்யன் said...

நல்ல அருமையான டேக்! அதுவும் பர்ஸ்ட் ஆரம்பிக்கப்போறவங்க ஒட்டுமொத்தமாவே - பிளாக் உலகில் - எல்லோருடைய மனங்களையும் பிரதிபலிக்கிற மாதிரியே சொல்லுவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு ஸோ மீ த வெயிட்டிங்க்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா எழுதலாம் அவந்தி.. நன்றி அழைத்ததுக்கு.. இளைஞர்கள் இதுபற்றி நீங்க கவனம் கொள்வது யோசிக்கறது மிக நல்ல விசயம்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

கிளாஸ் டிஸ்கஷனுக்கு தானே?

சும்மா இந்த கட்டுரையும் படிச்சு பாருங்க.

http://thatstamil.oneindia.in/editor-speaks/2008/12/01-combating-terrorism-how-the-federal-agency.html

கோபிநாத் said...

நல்ல முயற்சி தொடருங்கள்....

நாகை சிவா said...

நல்ல முயற்சி

Anonymous said...

why u keep the feeling for a long time. is it possible.?

terrorism of state is the root cause of mumbai attacks. so we should fight against it and try to remove the state terrorism like growing cancer.

now they attack hotels of tata and operai so and so. you wake up for that upper class brking capitalists. but last fifteen years world bank/wto attacked our agriculture that has gone to the lakes and lakes of suicides of indian, especially maharastrian, especially vidharba farmers. are you even crying for that our farmers. what kind of fellows....i cant live with these fellows world

Thekkikattan|தெகா said...

இம்மாம்பெரிய விசயத்தைப் பத்தி எழுத இத்தினிக்கூண்டு ஆள கூப்பிட்டு எழுதுய்யான்னா, நான் என்னாத்தை சொல்றது. நல்லா, யோசிச்சு எழுதப் பார்க்கிறேன்.

நல்ல நல்ல விசயங்கள் எல்லாம் பண்றீங்களே, சூப்பர்ப்! கூப்பிட்டு விட்டதற்கு ஒரு சிறப்பு நன்றி!

யட்சன்... said...

நாலு பேரில் நாந்தான் ஜூனியர்...

:)

அதுனால நான் என்ன சொன்னாலும் தப்பா எடுத்துக்க கூடாது...விரைவில் பதிவு வரும்...

நன்றி அவந்திகா...

சிம்பா said...

வணக்கம் அவந்திகா..

ஒரு முறை என்னோட குருவின் பதிவுல இருந்த பின்னூட்டத்துல உங்க பேர பார்த்தேன்.. ஆனா இப்போ குருவே உங்க பதிவோட இணைப்ப குடுத்து படிக்க சொன்னார்..

இங்க வந்த பின்னாடி தான் தெரியுது.. மேட்டர் ரொம்ப சீரியஸ் நு ... ம்ம்ம் உங்க கோபம் ஞாயாம் தான்..

ஒன்னுங்க உங்க வயசுகாரங்க ஜென் கதைகளை பற்றி சொல்றது உண்மையிலேயே பெரிய விஷயம்...

நல்ல இருக்கு...

சென்ஷி said...

நல்ல முயற்சி அவந்திகா அக்கா

Vinitha said...

Super!

But those politicians will be going out, with their gun totting commandos, paid by our tax money... along with government servants tagging behind wasting petrol / diesel ....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு ஸ்டூடண்ட்டா இருந்து நீங்க இதப் பத்தி பேசறதும், எழுதறதும் ரொம்ப சந்தோசமான விஷயம்.
அப்பத்தான் நம்ம dealers விட்டுட்டு. இந்தியாவுல leadersஐ உருவாக்கலாம்,

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உனக்காக பதிவு போட்டாச்சுப்பா அவந்தி.... :)

தென்றல் said...

அருமையான டேக்!

நல்ல முயற்சி,அவந்திகா!!

துளசி கோபால் said...

நாலுவரி எழுதி இருக்கேன் அவந்தி.

புலம்பச் சான்ஸ் கொடுத்ததுக்கு நன்றி:-)

http://thulasidhalam.blogspot.com/2008/12/blog-post.html

ராஜ நடராஜன் said...

//எப்பவும் மாதிரி ஒரு மாசம் பேசீட்டு இதை விடக்கூடாது...இந்த கொடூரம் தந்த பாதிப்பு நம்ம மனசுல இருந்துட்டே இருக்கனும்....அப்ப தான் மாற்றம் வேண்டும் என்கிற வெறி இருக்கும்.//

மனம் பதைத்த அந்தக் கணத்தில் நான்கூட இதனை பதிவு செய்தேன்.அதற்குப் பின் இந்திய-பாகிஸ்தான் வாய்ச்சண்டை வளர்ந்து "state actors and non state actors" ன்னு வார்த்தை ஜாலம் வளர்ந்துகிட்டு இருக்குது.இது பூகோளம்,மதம்,பன்னாட்டுக்கலவையில் ஊறிப்போன பல்கோணப் பிரச்சினை.இப்போதைக்கு முடிவுக்கு வரும் சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆப்கானிஸ்தான் யுத்தம் இன்னும் கூட நம்பிக்கை ஊட்டுவதாயில்லை.காரணம் அங்கிருந்து கரணமிட்டு ஈராக் யுத்தம்.திருடன்கிட்டயே பணப்பெட்டியப் பார்த்துக் கொள்ங்கிற மாதிரி பாகிஸ்தானிடமே கூட்டுக் கொள்கை.இது அமெரிக்காவின் நிலைப்பாடு.அரசியல் நாற்காலிக் குறிக்கோளில் பி.ஜே.பி செய்யும் மலேகான் சித்து விளையாட்டுக்கள்,உள்நாட்டு ராஜ் தாக்கரே போன்ற குறுகிய மனோபாவங்கள்,மதம் என்ற பித்துக்குள் விலைபோகும் சோக புத்திரர்கள் இவைகளையும் தாண்டி இருக்கும் நம்பிக்கைகள் போரிட்ட காவலர்கள்,ராணுவம் மற்றும் தேசியக் குமுறல்களாய் மும்பாய் மக்கள் காண்பித்த வார்த்தை ஜனநாயகம்(Democratic placard).

Thekkikattan|தெகா said...

Avanti,

இங்கே இருக்கு என்னோடது... இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

நாகை சிவா said...

போட்டாச்சு...

Better late than Never....

Here u go

http://tsivaram.blogspot.com/2008/12/blog-post.html

Anonymous said...

வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.

எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.
தாங்க‌ளறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்.


வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

அன்புடன் அருணா said...

A good start avantika!.
anbudan aruna

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in